Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் கிலோ ரூ.228க்கு விற்பனை

ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் கிலோ ரூ.228க்கு விற்பனை

ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் கிலோ ரூ.228க்கு விற்பனை

ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் கிலோ ரூ.228க்கு விற்பனை

ADDED : செப் 04, 2025 10:48 PM


Google News
Latest Tamil News
உடுமலை; ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த கொப்பரை ஏலத்தில், ஒரு கிலோ ரூ.228க்கு விற்பனையானது.

உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், தென்னை விவசாயம் பிரதானமாக இருந்து வருகிறது. இப்பகுதிகளில், விவசாயிகள் கொப்பரை உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றனர்.

உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், வியாழக்கிழமை தோறும், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. நேற்று நடந்த கொப்பரை ஏலத்திற்கு, உடுமலை, குறிச்சிக்கோட்டை, மானுப்பட்டி, வெனசப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து, 20 விவசாயிகள், 3,800 கிலோ எடையுள்ள, 76 மூட்டைகள் கொப்பரை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இ - நாம் திட்டத்தின் கீழ் நடந்த ஏலத்தில், ஆறு வியாபாரிகள் பங்கேற்றனர்.

முதல் தரம் அதிகபட்சமாக ஒரு கிலோ, ரூ.200.76 முதல் ரூ.228 வரை ஏலம் போனது. இரண்டாம் தரம், ரூ.150.76 முதல் ரூ.192.76 வரை ஏலம் போனது. இதன் மதிப்பு, ரூ. ஏழு லட்சத்து, 6 ஆயிரத்து, 423 ஆகும்.

ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கொப்பரை, தேங்காய் ஆகியவை தரம் பிரித்து, இ - நாம் திட்டத்தின் கீழ் ஏலம் விடப்படுவதால், கூடுதல் விலை கிடைத்து வருகிறது. மேலும், இ-நாம் திட்டத்தின் கீழ் விவசாய விளை பொருட்கள் ஏலம் நடந்து வருகிறது.

விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திலுள்ள உலர் களங்கள் மற்றும் விலை வரும் போது விற்பனை செய்யும் வகையில், குடோன் வசதியும் உள்ளது.

விவசாயிகள் இந்த வசதிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறும், மேலும் விபரங்களுக்கு, விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமாரை, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திருப்பூர் மாவட்ட விற்பனைக்குழு முதுநிலைச்செயலாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us