/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கொடைக்கு இலக்கணமாக மாநாட்டு அரங்கம்!கொடைக்கு இலக்கணமாக மாநாட்டு அரங்கம்!
கொடைக்கு இலக்கணமாக மாநாட்டு அரங்கம்!
கொடைக்கு இலக்கணமாக மாநாட்டு அரங்கம்!
கொடைக்கு இலக்கணமாக மாநாட்டு அரங்கம்!

கொடை வள்ளல்கள்
திருப்பூர் வரலாற்று ஆய்வு மைய அமைப்பாளர் சிவதாசன் பகிர்ந்த தகவல்கள்: திருப்பூர் கணபதிபாளையத்தில் நெசவு தொழில் செய்யும் தேவாங்க செட்டியார் சமூகத்தினர் அதிகளவில் இருந்தனர். அவர்களின் முன்னோடி சொக்கப்ப செட்டியார். அவரது வாரிசுகள் குள்ளி செட்டியார், மூக்கஞ்செட்டியார் மற்றும் ரங்கசாமி செட்டியார். ரங்கசாமி செட்டியார் குடும்பம், சிக்கண்ண செட்டியார் குடும்பம் கூட்டாக தொழில் நடத்தினர். பின்னர் பிரிந்து ரங்கசாமி செட்டியார் கர்நாடகா, கேரளா எனவும், சிக்கண்ண செட்டியார் திருப்பூர் மற்றும் இலங்கையிலும் வர்த்தகம் செய்தனர்.
பிரபலங்கள் பேசிய டவுன்ஹால்
ரங்கசாமி செட்டியார் குடும்பத்தின் வாரிசு தற்போது திருப்பூரில் வசித்து வரும் சுதர்சன் கூறியதாவது: எங்கள் பாட்டனார் சவுண்டப்ப செட்டியார் மற்றும் சொக்கலிங்கம் செட்டியார் ஆகியோர் இணைந்து தற்போதுள்ள இந்த வளாகத்தை அப்போதைய ஆங்கிலேய அரசிடமிருந்து பெற்று, அந்த இடத்தில் மக்கள் பயன்பாட்டுக்காக இந்த வளாகத்தை அமைக்கவும் நிதி வழங்கினர். எனது தாத்தா சொக்கலிங்கம் செட்டியாரின் தந்தை ரங்கசாமி செட்டியார் பெயர் அந்த வளாகத்துக்கு சூட்டப்பட்டது.