Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரூ.40.79 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

ரூ.40.79 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

ரூ.40.79 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

ரூ.40.79 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

ADDED : மார் 20, 2025 05:04 AM


Google News
வெள்ளகோவிலில் : வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 40.79 லட்சம் ரூபாய்க்கு தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது.

வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் வெள்ளகோவில், வாணியம்பாடி, சென்னிமலை, திருச்சி உள்ளிட்ட பல பகுதியில் இருந்து, 71 பேர், 29 ஆயிரம் கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வந்தனர். முதல் தர பருப்பு, 168 ரூபாய்க்கும், இரண்டாம் தரம், 94.92 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 40 லட்சத்து, 79 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us