ADDED : செப் 11, 2025 06:40 AM
வெள்ளகோவில்; வெள்ளகோவிலில் நடந்த ஏலத்தில், 39 லட்சம் ரூபாய்க்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், 56 பேர், 18 ஆயிரம் கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ, 237.19 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ 144.44 ரூபாய்க்கும் ஏலம் நடந்தது. மொத்தம், 39 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்க்கும் வர்த்தகம் நடந்ததாக, சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.