ADDED : அக் 18, 2025 11:26 PM
வெள்ளகோவில்: முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடக்கிறது. அதன்படி நடந்த கொப்பரை ஏலத்தில், 152 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. அவை அதிகபட்சமாக கிலோ, 210.15 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக, 155.10 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 154 கிலோ கொப்பரை, 30 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
தேங்காய் ஏலத்தில், 35 பேர் நேற்று விற்பனை கூடத்துக்கு, 4,013 தேங்காய் கொண்டு வந்தனர். மொத்தம், 97 ஆயிரம் ரூபாய்க்கு தேங்காய் விற்பனையானது.


