கஞ்சா சாக்லெட்ஒருவர் கைது
திருப்பூர் மாநகர மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் சுற்றுப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகப்படும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட்ட, ஒடிசாவைச் சேர்ந்த சித்தந்த குமார், 25, என்பவரை சோதனை செய்தனர்.
'குட்கா' பொருள்பதுக்கியவர் கைது
திருப்பூர் வடக்கு போலீசார், ரயில்வே ஸ்டேஷன் சுற்றுப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அங்கு சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த ஒரு நபரை பிடித்து சோதித்த போது, அவரிடம் 1.8 கிலோ எடையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் இருந்தது தெரிந்தது.
புகையிலைவிற்றவருக்கு அபராதம்
திருப்பூர் தெற்கு போலீசார், மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் ரோந்து மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் நடமாடிய ஒருவரை பிடித்து சோதனை செய்தனர்.
மது விற்றவர் கைது
திருப்பூர் அருகே அனுப்பர்பாளையம் போலீசார் நடத்திய சோதனையில், அனுப்பர்பாளையம் டாஸ்மாக் மதுக்கடை பார் அருகே, சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பது தெரிந்தது.
கஞ்சா வியாபாரி மீது 'குண்டாஸ்'
திருப்பூர், தெற்கு போலீசார் பதிவு செய்த கஞ்சா வழக்கில், பாலகிருஷ்ணன் என்பவர் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நகை, பணம் திருட்டு
முத்துார் - காங்கயம் ரோடு, ரங்கபையன் காட்டுப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், 50; தொழிலாளி. நேற்று காலை, 10:30 மணியளவில், கோவிலுக்கு செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.