பூட்டியே கிடக்கும் சிறுவர் பூங்கா
பூட்டியே கிடக்கும் சிறுவர் பூங்கா
பூட்டியே கிடக்கும் சிறுவர் பூங்கா
ADDED : ஜூன் 27, 2025 09:41 PM
உடுமலை; திருமூர்த்தி அணை அருகே, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள சிறுவர் பூங்கா பூட்டியே கிடப்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
உடுமலை அருகே, திருமூர்த்திமலை ஆன்மிக மற்றும் சுற்றுலா தலமாக உள்ளது. பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்று விட்டு, திரும்பும் சுற்றுலா பயணியருக்கு, வேறு, பொழுதுபோக்கு இடம் இல்லை.
இதனால், சில ஆண்டுகளுக்கு, முன், பொதுப்பணித்துறை சார்பில், காண்டூர் கால்வாய் அருகே, சிறுவர் பூங்கா ஏற்படுத்தப்பட்டது.
சில வாரங்கள் மட்டும், விளையாட்டு உபகரணங்களுடன், பயன்பாட்டில், இந்த பூங்கா இருந்தது. இந்த பூங்காவுக்கு எதிரில், பெரிய மரத்தடியில், மக்கள் அமரும் இருக்கையுடன், கால்நடைகள் சிலைகளுடன், சிறிய பூங்கா உருவாக்கப்பட்டது.
இப்பூங்காவும், மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல், பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இந்த பூங்காவை விடுமுறை நாட்களில் திறந்து வைத்து, முறையாக பராமரிக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.