/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ முதல்வர் கோப்பை; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு முதல்வர் கோப்பை; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
முதல்வர் கோப்பை; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
முதல்வர் கோப்பை; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
முதல்வர் கோப்பை; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ADDED : செப் 15, 2025 11:59 PM

திருப்பூர்; விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை சார்பில், ஆண்டுதோறும், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி நடத்தப்படுகிறது.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் என, 5 பிரிவுகளில் போட்டி குழு மற்றும் தனி நபர் போட்டிகள், தடகள போட்டிகள் நடத்தப்பட்டு, சான்றிதழ், பதக்கம் மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், கடந்த, 26ம் தேதி முதல் போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா, பெருமாநல்லுாரில் நேற்று நடைபெற்றது.
கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர். தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் பரிசு வழங்கினர்.
நிகழ்ச்சியில், திருப்பூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரகுகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் காளிமுத்து, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரியாஸ் அஹமது உட்பட பலர் பங்கேற்றனர்.