ADDED : மார் 23, 2025 11:45 PM

கோவையில் இருந்து கார் ஒன்று, நேற்று மாலை பல்லடம் நோக்கி வந்தது.
பல்லடம் அடுத்த, லட்சுமி மில்ஸ் பகுதியில், மைய தடுப்பின் மீது ஏறி, பத்தடி துாரத்துக்கு கார் துாக்கி வீசப்பட்டது. விபத்தில், காரில் இருந்த முதியவர் உட்பட இரண்டு பேர் காயங்களுடன் தப்பினர். விபத்தில், காரின் முன்பகுதி சிறிது சேதமடைந்தது. பல்லடம் போலீசார், விபத்துக்குள்ளான காரை மீட்டு, இருவரையும் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.