ADDED : ஜூன் 19, 2025 05:42 AM
''திருநங்கை, திருநம்பி உள்ளிட்டோர் பயன்பெறும்வகையில், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்ட விதிமுறைகளில் தளர்வு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. திருநங்கை, திருநம்பியர், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்கவேண்டும் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது. எந்தவகை பள்ளிகளில் படித்திருந்தாலும், இந்த திட்டங்களில் பயன்பெறலாம்.
கலெக்டர் அலுவலக வளகத்தில் செயல்படும் சமூக நல அலுவலகத்தில், வரும், 24ம் தேதி காலை, 10:30 மணிக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. திருநங்கை, திருநம்பிகள், நலவாரிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் பங்கேற்று, விவரங்களை பதிவு செய்ய வேண்டும்'' என கலெக்டர் தெரிவித்துள்ளார்.