/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருப்பூர் அருகே 3 வீட்டில் திருட்டுதிருப்பூர் அருகே 3 வீட்டில் திருட்டு
திருப்பூர் அருகே 3 வீட்டில் திருட்டு
திருப்பூர் அருகே 3 வீட்டில் திருட்டு
திருப்பூர் அருகே 3 வீட்டில் திருட்டு
ADDED : பிப் 06, 2024 01:29 AM
அனுப்பர்பாளையம்:திருப்பூர் அருகேயுள்ள பொம்மநாயக்கன்பாளையம், பாலன் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 42, பனியன் தொழிலாளி.
இவர் கடந்த, 1ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றார்.
இதையறிந்த மர்மநபர் வீட்டின் பூட்டை உடைத்து,அங்கிருந்த நகை,மோதிரம் ஒன்று என இரண்டரை சவரனை திருடி சென்றார்.
அதே வீதியில்உள்ள இரண்டு வீடுகளிலும் பூட்டை உடைத்து மர்ம நபர்கள், பொருட்களை திருடி சென்றுள்ளனர். இவ்வாறு, 3 வீடுகளில் நடந்த திருட்டு குறித்து, அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.