ADDED : ஜன 05, 2024 11:23 PM
உடுமலை;உடுமலை அருகே வெஞ்சமடையில் நிழற்கூரை இல்லாததால், பயணியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடுமலை - பழநி ரோடு வெஞ்சமடையில், விரிவாக்கப்பணியின் போது, நிழற்கூரை அகற்றப்பட்டது. ஆனால் பணிகள் முடிந்து நீண்ட நாட்களாகியும் அமைக்கப்படவில்லை.
இதனால், பயணியர் மழையிலும், வெயிலிலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது.
எனவே, அங்கு நிழற்கூரை அமைக்க, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் எதிர்பார்க்கின்றனர்.