/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சகோதர பாசம்; கற்றுத்தரும் கம்பராமாயணம்! சகோதர பாசம்; கற்றுத்தரும் கம்பராமாயணம்!
சகோதர பாசம்; கற்றுத்தரும் கம்பராமாயணம்!
சகோதர பாசம்; கற்றுத்தரும் கம்பராமாயணம்!
சகோதர பாசம்; கற்றுத்தரும் கம்பராமாயணம்!

நீடித்த பந்தம்
'கணவன் - மனைவியே அணியினர் பேசுகையில், ''கம்பன் காவியம் எழுந்ததே, பிறர்மனை நோக்காமை என்கிற அறத்தை நிலை நாட்டுவதற்கே. முதன் முதலில் ஒரு ஆணும், பெண்ணும் தோன்றியவுடன் அவர்களை, கணவன் - மனைவி என்கிற உறவில் இணைத்தார் இறைவன். அறத்தின் மூர்த்தியான ராமன் சில இடங்களில் அறத்தை விட்டு தடுமாறுவதற்கும், திருமண உறவே காரணமாக இருந்திருக்கிறது. சுக்ரீவனின் மனைவியை வாலி, கவர்ந்து சென்றான். மனைவியை பிரிந்து கணவனால் இருக்க முடியாது. கம்பன் காவியம் முழுவதும், சீதை, ராமனுடனேயே பயணிக்கிறாள்,'' என்றனர்.
நிலையான சொந்தம்
'அண்ணன் - தம்பி உறவே' அணியினர் பேசுகையில், ''கம்பராமாயணத்தின் மையக்கருத்து, பிறன்மனை நோக்காமை, அறம் வெல்லும்; பாவம் தோற்கும் என்பது. கம்ப ராமாயணத்தில், சகோதரத்துவம் என்ற மூன்றாவது மையக்கருத்து ஒன்றும் இருப்பதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ராமனோடும், சீதையோடும் இருந்த தம்பிகள் தான், கணவன் மனைவி பிரிவு துயரத்தை துடைத்தவர்கள். கம்பராமாயணத்தில் கணவன் - மனைவி உறவு நிலைத்திருக்க, உயர்ந்து நிற்க அச்சாணியாக இருந்தது அண்ணன் - தம்பி உறவுதான்'' என்றனர்.
சகோதர இலக்கணம்!
நடுவர் ராமகிருஷ்ணன் தீர்ப்பளித்து பேசியதாவது: