/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தலைவர்களை உருவாக்கும் 'பிரம்மா'க்கள் தலைவர்களை உருவாக்கும் 'பிரம்மா'க்கள்
தலைவர்களை உருவாக்கும் 'பிரம்மா'க்கள்
தலைவர்களை உருவாக்கும் 'பிரம்மா'க்கள்
தலைவர்களை உருவாக்கும் 'பிரம்மா'க்கள்

மருத்துவக்கனவு நனவாகிறது
சுரேஷ்குமார், மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர்: கடந்த, 2014 முதல் மருத்துவ படிப்புக்கு அரசுப்பள்ளி மாணவ, மாணவியரை தயார்படுத்தி வருகிறோம். மாவட்டத்தில், 96 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. 11, 12ம் வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு பாட புத்தகத்தில் உள்ள பாடத்துடன், 'நீட்', ஐ.ஐ.டி., ஜெ.இ.இ., போட்டி தேர்வுக்குரிய பயிற்சியை ஆசிரியர்கள் வழங்குகின்றனர். ஆர்வமுள்ள மாணவ, மாணவியருக்கு, வார இறுதி நாட்களில் சிறப்பு பயிற்சி, தேர்வு நெருங்கும் இரு மாதத்தில் தொடர் பயிற்சியை ஆசிரியர்கள் வழங்குகின்றனர்.
ஆசிரியப்பணியே அறப்பணி
ஆழ்வை கண்ணன், அரசின் தமிழ்ச்செம்மல் விருதாளர்: வலுவான சமுதாயம், வளமான தேசத்தை கட்டமைக்கும் பொறுப்பு, ஆசிரிய சமூகத்துக்கே உண்டு. நல்லதொரு மாணவ சமுதாயத்தை செதுக்கும் சிற்பிகள் ஆசிரியர்கள் தான். ஆசிரியர்கள் அறிவுரை கூறினால், அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் மாணவர்களுக்கு வர வேண்டும். ஆசிரிய பணியே அறப்பணி; அதற்கு உன்னை அர்ப்பணி என்பார்கள்.
கனவைத் துரத்தி பிடித்தேன்
கல்லுாரிப் பேராசிரியர், கவிஞர், எழுத்தாளர், திரைப்பட பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட மணிவண்ணன்: நான் ஆசிரியர் குடும்பத்தை சேர்ந்தவன்; தன் மகன், டாக்டராக, பொறியாளராக வேண்டும் என்ற எண்ணம், என் பெற்றோருக்கும் இருந்தது. மிக சராசரியாக படிக்கும் கடைநிலை மாணவன் நான்.