/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பெங்களூரு 'வந்தே பாரத்' ரயில் திருப்பூர் வரும் நேரம் மாற்றம்பெங்களூரு 'வந்தே பாரத்' ரயில் திருப்பூர் வரும் நேரம் மாற்றம்
பெங்களூரு 'வந்தே பாரத்' ரயில் திருப்பூர் வரும் நேரம் மாற்றம்
பெங்களூரு 'வந்தே பாரத்' ரயில் திருப்பூர் வரும் நேரம் மாற்றம்
பெங்களூரு 'வந்தே பாரத்' ரயில் திருப்பூர் வரும் நேரம் மாற்றம்
ADDED : பிப் 24, 2024 01:29 AM
திருப்பூர்;கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில், திருப்பூரை கடந்து செல்லும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் (எண்: 20642) காலை, 5:00 மணிக்கு கோவையில் புறப்பட்டு, 5:38 மணிக்கு திருப்பூரை கடந்து, ஈரோடு நோக்கி பயணித்தது. பயணிகள் வசதிக்காக இந்த ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இனி காலை, 7:25 மணிக்கு கோவையில் புறப்படும் ரயில், 8:03 மணிக்கு திருப்பூர் ஸ்டேஷன் வரும். மதியம், 1:50 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
மறுமார்க்கமாக பெங்களூரில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் ரயில் (எண்:20641) மதியம், 1:40 க்கு பதிலாக, இனி, 2:20 மணிக்கு புறப்படும், இரவு, 7:31 மணிக்கு திருப்பூரை கடந்து, 8:20 மணிக்கு கோவை சென்று சேரும் என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.