/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வாழையில் 'எர்வினியா' நோய் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வாழையில் 'எர்வினியா' நோய் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
வாழையில் 'எர்வினியா' நோய் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
வாழையில் 'எர்வினியா' நோய் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
வாழையில் 'எர்வினியா' நோய் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
ADDED : மார் 21, 2025 02:13 AM
திருப்பூர்: ''காலநிலை மாற்றத்தால் வாழையில், 'எர்வினியா' அழுகல் நோய் தாக்கும் வாய்ப்புள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
காலநிலை மாற்றத்தால், வாழையில் எர்வினியா அழுகல் நோய் தாக்கும் வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க, சனப்பை ஒரு ஏக்கருக்கு, 10 கிலோ என்ற அளவில் விதைக்க வேண்டும். கோழிகளுக்கு வெப்ப அயர்ச்சி நோய் ஏற்படும் வாய்ப்புண்டு. எனவே, கோழி வளர்ப்பில் ஈடுபடுவோர் கோழிக் கூடாரங்களில், இரு ஓரங்களிலும் நனைந்த சாக்குப்பை தொங்கவிட வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.