/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அத்திக்கடவு திட்டம்; குறைகேட்பு கூட்டம் அவசியம் அத்திக்கடவு திட்டம்; குறைகேட்பு கூட்டம் அவசியம்
அத்திக்கடவு திட்டம்; குறைகேட்பு கூட்டம் அவசியம்
அத்திக்கடவு திட்டம்; குறைகேட்பு கூட்டம் அவசியம்
அத்திக்கடவு திட்டம்; குறைகேட்பு கூட்டம் அவசியம்
குழாய்களில்உடைப்பு - அடைப்பு
இருப்பினும், திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்டுள்ள குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு மற்றும் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் நீர் செறிவூட்டும் பணியில் தடங்கல் ஏற்படுகிறது என, அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கூறி வருகின்றனர். இதனால், ஒவ்வொரு நீரேற்று நிலையங்களிலும், முழுமையாக மோட்டார்களை இயக்க முடிவதில்லை எனவும் கூறப்படுகிறது.
கண்காணிப்பு அவசியம்
அவிநாசி வட்டார விவசாயிகள் கூறியதாவது:தற்போது, நீலகிரி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், பருவமழை, பரவலாக பெய்து வரும் நிலையில், அத்திக்கடவு திட்டத்தின் கீழ் நீர் செறிவூட்டும் பணியிலும் தொய்வு இருக்காது என கருதுகிறோம். திட்டத்தின் கீழ் குளம் குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி சென்சார் கருவிகள் வாயிலாக, உரிய முறையில் நீர் செறிவூட்டப்பட்டிருக்கிறதா என்பதையும் அதிகாரிகள் அவ்வப்போது உறுதிப்படுத்த வேண்டும்.
கருத்து கேட்கப்படவேண்டும்
அத்திக்கடவு திட்டம் என்பது, அரசின் சிறப்பு நீர் மேலாண்மை திட்டம் என்ற அடிப்படையில், மாதம் ஒரு முறை மாவட்ட கலெக்டர் தலைமையில், இத்திட்டம் தொடர்பான குறைகேட்பு கூட்டம் நடத்தி, அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் அத்திக்கடவு ஆர்வலர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும்.