/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அதிநவீனப்பாதையில் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்; 50 சதவீத மூலதன மானியம் வழங்குமா மத்திய அரசு?அதிநவீனப்பாதையில் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்; 50 சதவீத மூலதன மானியம் வழங்குமா மத்திய அரசு?
அதிநவீனப்பாதையில் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்; 50 சதவீத மூலதன மானியம் வழங்குமா மத்திய அரசு?
அதிநவீனப்பாதையில் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்; 50 சதவீத மூலதன மானியம் வழங்குமா மத்திய அரசு?
அதிநவீனப்பாதையில் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்; 50 சதவீத மூலதன மானியம் வழங்குமா மத்திய அரசு?

வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்
பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதால், 10 சதவீதம் வர்த்தகம் அதிகரிக்கும்; திருப்பூர் வளர்ச்சியில் ஓர் மைல்கல்லாக இருக்கும். அமெரிக்கா, ஐரோப்பாவுடன் வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறும் போது, நாட்டின் ஜவுளி ஏற்றுமதி, 2030ல், ஒன்பது லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்.
தொழில்நுட்ப மேம்பாடு
'டப்' என்ற தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம் முடிந்த பின், ஜவுளித்துறையை நவீனமாக்கும் முயற்சியில் சிக்கல் நிலவுகிறது. திட்டமிட்டுள்ளபடி, 15 சதவீத வளர்ச்சியை தக்கவைக்க, தொழில்நுட்ப மேம்பாடு மிக அவசியம். குறிப்பாக, 'ஏ.ஐ.,' தொழில்நுட்பத்தை செயல்படுத்த அதிக முதலீடு செய்ய வேண்டும். புதிய மூலதன முதலீட்டுக்கு, 50 சதவீத மானியம் வழங்க வேண்டும்.
மேற்கூரை சூரிய ஒளி மின் கட்டமைப்பு
திருப்பூரின் மின்கட்டண செலவை குறைக்க, சூரிய ஒளி மின் சக்தியை பயன்படுத்த வேண்டும். அதற்காக, 'ரூப்டாப்' என்ற மேற்கூரை சோலார் பயன்படுத்தி வருகின்றனர். குறு, சிறு நிறுவனங்கள், மேற்கூரை சூரிய ஒளி மின் கட்டமைப்பை அமைக்க, 90 சதவீதம் மானியம் வழங்கி உதவ வேண்டும். திருப்பூரின் பசுமை சார் உற்பத்தியை ஊக்குவிப்பதாகவும் இருக்கும். பல்வேறு வகையான வரியினங்களை, ஏற்றுமதியின் போது வரி செலுத்துவதில் சரிக்கட்டும் திட்டத்தை, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். சர்வதேச ஏற்றுமதி வர்த்தகத்தில் புதிய உயரத்தை எட்ட, இத்தகைய போட்டித் தன்மையை மேம்படுத்தும் அத்தியவாசிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
மனுக்களை வழங்கிய தொழில்துறையினர்
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) துணை தலைவர் ராமு கொடுத்த மனுவில்,' திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், நடப்பு ஆண்டில், 50 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும். விரைவில், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி மேம்படும். 'பி.எல்.ஐ., -2.0' திட்டத்தை, 25 கோடி ரூபாய் முதலீடு என்ற மறுசீரமைப்புடன் செயல்படுத்த வேண்டும். கட்டுப்பாடற்ற பின்னல் துணி இறக்குமதிக்கு அனுமதிக்க வேண்டும். புதிய செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி நிறுவனம் துவங்க, 25 சதவீத முதலீட்டு மானியம் வழங்க வேண்டும். 'பி.எம்., - மித்ரா' திட்டத்தில், 30 சதவீத முதலீட்டு மானியம் வழங்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.