ADDED : ஜூன் 01, 2025 07:16 AM
திருப்பூர் : திருப்பூரில் கவிஞர் நாதன் ரகுநாதனுக்கு பாராட்டு விழா நடை பெற்றது.
திருப்பூர், பி.என்., ரோடு, பாண்டியன் நகரில் உள்ள நாலேட்ஜ் சென்டர் வளாகத்தில், கவிஞர் நாதன் ரகுநாதனின் படைப்புகளுக்கு பாராட்டு கூட்டம் நடைபெற்றது. அவரது எழுத்துலக செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து பாராட்டப்பட்டது.
எழுத்தாளர் சுப்ர பாரதிமணியன் தலைமை வகித்தார். கவிஞர் செங்கவி அருணாசலம் வரவேற்றார். பல்வேறு எழுத்தாளர்கள், நுால் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். கவிஞர் ரகுநாதன் ஏற்புரை வழங்கினார். முடிவில், மலர் மன்னன் நன்றி கூறினார்.