/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வட்டமலைக்கரை அணைக்கு அமராவதி தண்ணீர் வட்டமலைக்கரை அணைக்கு அமராவதி தண்ணீர்
வட்டமலைக்கரை அணைக்கு அமராவதி தண்ணீர்
வட்டமலைக்கரை அணைக்கு அமராவதி தண்ணீர்
வட்டமலைக்கரை அணைக்கு அமராவதி தண்ணீர்
6,500 ஏக்கர் விளைநிலம்பயனடைய வாய்க்கால்கள்
இதன் வாயிலாக, 6,500 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெற்று பயனடையும் வகையில் வாய்க்கால்களும் அமைக்கப்பட்டது. பி.ஏ.பி., பாசன கால்வாய் கசிவு நீர் மற்றும் பல்லடம், பொங்கலுார், அனுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சேகரமாகும் மழையால், 350 சதுர மைல் பரப்பு நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து பெறப்படும் நீர், வட்டமலைக்கரை ஓடையில் வரும் தண்ணீர் ஆகியன இதில் தேக்கி வைத்து, அதனை பாசனத்துக்குப் பயன்படுத்தும் வகையிலும் இதன் பயன்பாடு திட்டமிட்டு அணை கட்டப்பட்டது.
கடலுக்கு சென்ற 20 டி.எம்.சி., நீர்
கடந்த ஐந்தாண்டில், அமராவதியிலிருந்து, 20 டி.எம்.சி., அளவு தண்ணீர் கடலுக்குச் சென்றிருக்கிறது. இந்த அணையின் கொள்ளளவே, 53 டி.எம்.சி., தான்.இந்த அணையை அமராவதியுடன் இணைப்பது குறித்து ஆய்வு செய்ய கடந்த, 2021ல், அரசு, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. அதன்படி அமராவதி ஆற்றிலிருந்து நிரந்தர தீர்வாக தண்ணீர் கொண்டு வருவது குறித்து, திட்டக்குழு அதிகாரிகள், பொதுப்பணித்துறையினர் உள்ளிட்டோர், கடந்த 2023ல் ஆய்வு நடத்தினர். நீர் வழிப்பாதை நேரில் ஆய்வு செய்யப்பட்டது.