Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தோண்டப்பட்ட குழி மூடாததால் அதிகரிக்கும் விபத்துக்கள்

தோண்டப்பட்ட குழி மூடாததால் அதிகரிக்கும் விபத்துக்கள்

தோண்டப்பட்ட குழி மூடாததால் அதிகரிக்கும் விபத்துக்கள்

தோண்டப்பட்ட குழி மூடாததால் அதிகரிக்கும் விபத்துக்கள்

ADDED : மார் 21, 2025 10:13 PM


Google News
Latest Tamil News
உடுமலை; உடுமலை நகராட்சியால், குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி மூடப்படாததால், விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.

உடுமலை நகராட்சி சார்பில், வாசவி நகர் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் செல்லும் வகையில், ஒரு மாதத்திற்கு முன் புதிதாக குழாய் பதிக்கும் பணி நடந்தது.

பணி முடிந்தும், அனுஷம் ரோடு, யு.எஸ்.எஸ்., காலனி பகுதியில், திருப்பத்தில் தோண்டப்பட்ட குழி மூடப்படாமல், உள்ளது.

பஸ் ஸ்டாண்டிலிருந்து தாராபுரம் ரோட்டிற்கு வரும் வாகனங்கள், நுாறு அடி ரோட்டில் வரும் வாகனங்கள் என போக்குவரத்து அதிகம் உள்ள ரோட்டில், தோண்டப்பட்ட குழி மூடப்படாததால், இரவு நேரங்களில் குழியில் வாகனங்கள் விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே, இக்குழியை மூட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us