ADDED : ஜூன் 12, 2025 11:15 PM
திருப்பூர்; மகளிடம் அத்துமீறிய தந்தை முறையிலானவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் அருகேயுள்ள ஒரு பகுதியை சேர்ந்த, 21 வயது இளம்பெண். இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். காதலரை திருமணம் செய்து கொள்ள நினைத்த பெண், தன் தாயிடம் காதல் விவகாரம் குறித்து தெரிவித்தார்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய், தனது இரண்டாவது கணவரிடம் தெரிவித்தார்.
காதல் விவகாரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட தந்தை முறையிலான அவர், இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டு, வீடியோ எடுத்துள்ளார். இதை காட்டி பெண்ணை அவ்வப்போது மிரட்டி வந்தார். புகாரின் பேரில், மங்கலம் போலீசார் அவரை கைது செய்தனர்.