Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 750 மரக்கன்று நடவு; பசுமை பயணம் துவங்கியது

750 மரக்கன்று நடவு; பசுமை பயணம் துவங்கியது

750 மரக்கன்று நடவு; பசுமை பயணம் துவங்கியது

750 மரக்கன்று நடவு; பசுமை பயணம் துவங்கியது

ADDED : ஜூன் 26, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் - 11ல் காங்கயத்தில், 750 மரக்கன்றுகள் நடப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தை பசுமையாக்கும் லட்சியத்தில், வெற்றி அமைப்பு சார்பில், வனத்துக்குள் திருப்பூர் திட்டம், கடந்த பத்து ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பத்து திட்டங்களில் இதுவரை, 22 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, அவை பல இடங்களில் குறுங்காடு போல வளர்ந்து பசுமையை பரப்பி வருகின்றன.

தற்போது, 11ம் திட்டம் துவங்கி மாவட்டத்தில் பல இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. காங்கயம், பல்லவராயன்பாளையம், கரபள்ளக்காட்டு தோட்டத்தில், சிவசுப்ரமணியன் என்பவரின் தோட்டத்தில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. வேம்பு, 400, மகோகனி, 200, தேக்கு, 100, செம்மரம், 10, சந்தனம், 15, நெல்லி, 25 என, மொத்தம், 750 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில், விவசாயிகள், வனத்துக்குள் திருப்பூர் திட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இத்திட்டத்தின் கீழ் இலவசமாக மரக்கன்று நட, திட்ட கள அலுவலரை, 90474 - 86666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாமென திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us