Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நைஜீரியர்கள் 5 பேர் கைது

நைஜீரியர்கள் 5 பேர் கைது

நைஜீரியர்கள் 5 பேர் கைது

நைஜீரியர்கள் 5 பேர் கைது

ADDED : ஜூன் 29, 2025 02:08 AM


Google News
திருப்பூர்:'விசா' முடிந்தும் தங்கியிருந்த, ஐந்து நைஜீரியர்களை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் அடுத்த மங்கலம், நீலி பிரிவில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். பூந்தோட்டம் என்ற இடத்தில் நைஜீரியர் சிலர் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பது தெரியவந்தது. அவர்களிடம் மங்கலம் போலீசார் விசாரித்தனர். ஐந்து பேரிடம் விசா காலம் முடிந்து, மூன்று முதல், ஆறு மாதம் வரை ஆகியிருந்தது.

'விசா' முடிந்தும் முறைகேடாக தங்கியிருந்த குற்றத்துக்காக வின்சென்ட், 35, சிகேசி, 43, ஆன்ட்ரூ உகோச்சுக்வு, 25, சின்வே பாலினஸ், 52, அந்தோணி சிக்கோஜி, 41, என, ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அனைவரும், திருப்பூரில் பின்னலாடைகளை வாங்கி, தங்கள் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது தெரிந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us