Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஆண்டுதோறும் வீணாகும் 4 டி.எம்.சி., நீர்

ஆண்டுதோறும் வீணாகும் 4 டி.எம்.சி., நீர்

ஆண்டுதோறும் வீணாகும் 4 டி.எம்.சி., நீர்

ஆண்டுதோறும் வீணாகும் 4 டி.எம்.சி., நீர்

ADDED : மார் 24, 2025 06:43 AM


Google News
திருப்பூர்: அமராவதி ஆற்றின் குறுக்கே காங்கயம் பகுதியில் தடுப்பணைகள் இருந்தால், ஆண்டுக்கு 4 டி.எம்.சி., நீர் வீணாவதைத் தடுக்க முடியும். மயில்ரங்கம் பகுதியில், தடுப்பணை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கேரள மாநில எல்லையில் உருவாகி, திருப்பூர் மாவட்டம், உடுமலை, தாராபுரம், காங்கயம் பகுதிகளைக் கடந்து 200 கி.மீ., நீளத்துக்கும் மேல் பயணித்து அமராவதி ஆறு, கரூர் அருகே காவிரியில் சென்று சேர்கிறது. ஆற்றில் மழைக்காலங்களில் அதிகளவில் நீர் செல்கிறது. உடுமலை, தாராபுரம் பகுதிகளில் குடிநீர் ஆதாரமாகவும் இது உள்ளது. காங்கயம் அருகே, பல்வேறு கிராமங்களைக் கடந்து இந்த ஆறு செல்கிறது. இதில் எங்கும் தடுப்பணைகள் இல்லை. இதனால், ஆற்றில் பாயும் நீர் பெருமளவு பயன் தராத நிலை உள்ளது. ஆண்டு தோறும் சராசரியாக 4 டி.எம்.சி., அளவு நீர் வீணாகச் செல்கிறது.

இதை முறையாகப் பயன்படுத்தும் வகையில், வெள்ளகோவில் அடுத்த மயில்ரங்கம் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. கன்னிவாடி பேரூராட்சி, மூலனுார் பேரூராட்சி, எரிசனம்பாளையம் ஊராட்சி வேலப்ப நாயக்கன் வலசு ஊராட்சிக்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இதன் மூலம் பயன்பெறும். விவசாய கிணறுகள், குடிநீர் ஆதாரம், நிலத்தடி நீர் பெருகும். பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறும். கால்நடை வளர்ப்பபோர் பயன் பெறுவர். விவசாய தொழிலை விட்டு அருகேயுள்ள நகரங்களுக்கு வேலைக்குச் செல்வோர் தங்கள் சொந்த ஊரில் விவசாயத்தை மேம்படுத்துவர். கிராம பொருளாதாரம் உயரும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us