Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மூணாறு ரோட்டில் போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கம்

மூணாறு ரோட்டில் போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கம்

மூணாறு ரோட்டில் போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கம்

மூணாறு ரோட்டில் போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கம்

ADDED : மார் 12, 2025 10:59 PM


Google News
உடுமலை; மழை காரணமாக, உடுமலை - மறையூர் ரோடு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், போக்குவரத்து கட்டுப்பாடின்றி வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.

உடுமலையிலிருந்து கேரளா மாநிலம் மூணாறு செல்லும் ரோட்டில், சின்னாறு முதல் மறையூர் வரை, 16 கி.மீ., துாரம் ரோடு புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, இந்த ரோட்டில், காலை, 10:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், மழை காரணமாக, நேற்று பணிகள் நிறுத்தப்பட்டு, வாகனங்கள் கட்டுப்பாடு இல்லாமல் அனுமதிக்கப்பட்டது. இன்றும், பணிகள் நடக்காது; வாகனங்கள் அனுமதிக்கப்படும். மழை தொடர்ந்தால், பணி மேற்கொள்ள முடியாது, என கேரளா பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us