/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மடத்துக்குளத்தில் போக்குவரத்து நெரிசல் மடத்துக்குளத்தில் போக்குவரத்து நெரிசல்
மடத்துக்குளத்தில் போக்குவரத்து நெரிசல்
மடத்துக்குளத்தில் போக்குவரத்து நெரிசல்
மடத்துக்குளத்தில் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூலை 30, 2024 02:05 AM
உடுமலை:திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில், மடத்துக்குளம் நகரம் அமைந்துள்ளது. இங்கு பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. பல்வேறு நகரங்களிலிருந்து மடத்துக்குளம் வழியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளியூர், டவுன் பஸ்கள் செல்கின்றன.
ஆனால், டவுன்பஸ்கள் தவிர வெளியூர் பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாமல், வெளியே ரோட்டிலேயே நின்று பயணியரை ஏற்றி, இறக்கிச்செல்கின்றன. இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்ல. போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.