/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசு கல்லுாரிகளில் சேர இன்று கடைசி வாய்ப்பு அரசு கல்லுாரிகளில் சேர இன்று கடைசி வாய்ப்பு
அரசு கல்லுாரிகளில் சேர இன்று கடைசி வாய்ப்பு
அரசு கல்லுாரிகளில் சேர இன்று கடைசி வாய்ப்பு
அரசு கல்லுாரிகளில் சேர இன்று கடைசி வாய்ப்பு
ADDED : ஜூலை 05, 2024 12:40 AM
திருப்பூர்;இதுவரை இளங்கலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்காத மாணவர், மாணவியர், அரசு கலை அறிவியல் கல்லுாரியில் இன்று விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பை மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளிவந்த நாளிலே, அரசு கல்லுாரிகளில் அட்மிஷனுக்கு விண்ணப்பம் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. ஜூன் முதல் வாரம் துவங்கி, கடைசி வரை இரண்டு கட்டமாக கவுன்சிலிங் நடந்தது.
கவுன்சிலிங் முடிந்து, கடந்த, 3 ம் தேதி கல்லுாரிகள் திறக்கப்பட்டது. கவுன்சிலிங்கில் பாடப்பிரிவு பெற்ற மாணவ, மாணவியர் கல்லுாரி வகுப்புகளுக்கு வர துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், கல்லுாரியில் இணைய விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஜூலை, 3 முதல், 5 ம் தேதி வரை விண்ணப்பிக்க கல்லுாரி கல்வி இயக்ககம் அவகாசம் வழங்கியது; இன்று (5 ம் தேதி) கடைசி நாள்.
இதுவரை அரசு கல்லுாரியில் இணைய விண்ணப்பிக்காதவர்கள் இன்று விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட நாட்களில் விண்ணப்பித்தவர்களுக்கு, 8ம் தேதி காலியிடங்களுக்கு ஏற்ப, கவுன்சிலிங் நடத்தப்பட்டு, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.