Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நொய்யலில் தண்ணீர்.. ஆனால், குளம் காய்கிறது

நொய்யலில் தண்ணீர்.. ஆனால், குளம் காய்கிறது

நொய்யலில் தண்ணீர்.. ஆனால், குளம் காய்கிறது

நொய்யலில் தண்ணீர்.. ஆனால், குளம் காய்கிறது

ADDED : ஆக 01, 2024 01:34 AM


Google News
Latest Tamil News
திருப்பூர் : ஊத்துக்குளி அருகே படியூர் - அணைப்பாளையம் கிராமத்தில் உள்ள குளத்துக்கு தண்ணீர் தேங்கு வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஊத்துக்குளி வட்டாரம், படியூர் அணைப்பாளையம் கிராமத்தில் உள்ள குளத்துக்கு மழையின் போது நீர் தேங்குவது வழக்கம்; இந்நீர், அங்குள்ள விவசாய நிலங்களுக்கு பயன் அளித்தது.

தற்போது, செடி, கொடிகளால் புதர்மண்டிக் கிடக்கும் குளத்துக்கு தண்ணீர் வருவது தடைபட்டுள்ளது. நொய்யல் ஆற்றில், தற்போது அதிகளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இந்த நீரை விவசாய பயன்பாட்டுக்கு பொதுப்பணித்துறையினர் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us