/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ராமாயண தொடர் சொற்பொழிவு வரும் 29ல் துவங்குகிறது ராமாயண தொடர் சொற்பொழிவு வரும் 29ல் துவங்குகிறது
ராமாயண தொடர் சொற்பொழிவு வரும் 29ல் துவங்குகிறது
ராமாயண தொடர் சொற்பொழிவு வரும் 29ல் துவங்குகிறது
ராமாயண தொடர் சொற்பொழிவு வரும் 29ல் துவங்குகிறது
ADDED : ஜூன் 25, 2024 01:51 AM
உடுமலை;உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கார்த்திகை விழா மன்றம் சார்பில், கம்ப ராமாயண தொடர் சொற்பொழிவு வரும், 29ல் துவங்குகிறது.
உடுமலை கார்த்திகை விழா மன்றம் சார்பில், பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
இதில், ஆனி மாத கிருத்திகையையொட்டி, மன்றத்தின், 800 வது நிகழ்ச்சியாக, கம்ப ராமாயண தொடர் சொற்பொழிவு வரும், 29ல் துவங்குகிறது.
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், 6 நாட்கள் புலவர் சுபாசுசந்திரபோசு சொற்பொழிவாற்ற உள்ளார். ஏற்பாடுகளை கார்த்திகை விழா மன்றத்தினர் செய்து வருகின்றனர்.