Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மும்பையை புரட்டிப் போட்ட மழை சரக்கு போக்குவரத்தில் பாதிப்பில்லை... திருப்பூர் பனியன் உற்பத்தியாளர் நிம்மதி

மும்பையை புரட்டிப் போட்ட மழை சரக்கு போக்குவரத்தில் பாதிப்பில்லை... திருப்பூர் பனியன் உற்பத்தியாளர் நிம்மதி

மும்பையை புரட்டிப் போட்ட மழை சரக்கு போக்குவரத்தில் பாதிப்பில்லை... திருப்பூர் பனியன் உற்பத்தியாளர் நிம்மதி

மும்பையை புரட்டிப் போட்ட மழை சரக்கு போக்குவரத்தில் பாதிப்பில்லை... திருப்பூர் பனியன் உற்பத்தியாளர் நிம்மதி

ADDED : ஜூலை 09, 2024 10:50 PM


Google News
திருப்பூர்:கனமழை காலம் என்பதால், மும்பை வெள்ளத்தால், பனியன் ஆடை உற்பத்தியில் பெரிய பாதிப்பு இருக்காது என, தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வெள்ளக்காடாக மாறியுள்ளது. குறிப்பாக, நகரப்பகுதியில், விமான நிலையம், ரயில்நிலையம் உட்பட, அனைத்து இடங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளன.

திடீர் மழை காரணமாக, திருப்பூரில் இருந்து ஏற்றி சென்ற பனியன் ஆடைகள் உரிய இடத்தை சென்றடைந்ததா? மாநில எல்லையோரமாக முகாமிட்டிருக்குமா? என்று, இங்குள்ள உற்பத்தியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கடுமையான வெள்ள பாதிப்பு என்பதால், பனியன் ஆடை வியாபாரம் இயல்பு நிலை நீண்ட நாட்களாகுமா என்ற கவலையும் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் - மும்பை இடையேயான பனியன் வர்த்தகத்தில், ஜூன் - ஜூலை மாதம் என்பது மந்தமான காலம். எனவே, இந்த சீசனில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டாலும், பனியன் தொழிலுக்கு பெரிய பாதிப்பு இருக்காது; அடுத்தது, தீபாவளி பண்டிகை ஆர்டர்களுக்காக காத்திருப்பதாக, பனியன் ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

-------------------------------------------------------------

சில நாட்களாகும்....

திருப்பூரில் இருந்து மும்பை செல்லும் சரக்கு லாரிகள், நகரப்பகுதிக்கு செல்வதில்லை. புறநகர் பகுதிகளில் உள்ள குடோன்களில் சரக்கை கொண்டு சேர்க்கின்றன. தற்போதைய நிலவரப்படி, நகரப்பகுதியில் மழை வெள்ள பாதிப்பு உள்ளது. நேற்று காலை விசாரித்தது வரை, திருப்பூரில் இருந்து சென்ற கூட்ஸ் லாரிகளுக்கோ, பனியன் ஆடைகளுக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை. மும்பையில் உள்ள மார்க்கெட், இயல்புநிலை திரும்ப சில நாட்களாகும்.

- முருகேஷ்

திருப்பூர் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட்

அசோசியேஷன் தலைவர்

---

தீபாவளி ஆர்டர் வரும்...

திருப்பூருக்கு, நேரடியாக மும்பையில் இருந்து ஆர்டர் கொடுக்கின்றனர்; சரக்கை வாராவாரம் எடுக்கின்றனர். பனியன் ஆடை ஆர்டரை பொறுத்தவரை, ஜூன், ஜூலை மாதங்கள் மந்தமாக இருக்கும். ஆக., மாதம் 2வது வாரத்துக்கு பின்னர்தான், ஆர்டர் வரத்து அதிகரிக்கும்.

தேர்தல் காரணமாக, வழக்கமான ஆர்டர் பாதிக்கப்பட்டிருந்தது; தற்போது, மும்பையில் கனமழை பெய்யும் காலம் என்பதால், சரக்கு எடுக்க மாட்டார்கள். மழை வெள்ள பாதிப்பால், வியாபாரம் சில நாட்கள் பாதிக்கலாம்; மற்றபடி சரக்குகளுக்கு சேதமில்லை. வரும் ஆக., 2வது வாரத்துக்கு பின், தீபாவளிக்கான ஆர்டர்கள் வரத்து அதிகரிக்கும்.

- பாலசந்தர்

திருப்பூர் 'சைமா' சங்க

துணை தலைவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us