ADDED : ஜூலை 29, 2024 03:19 AM
அவிநாசி;பல்லடம், சின்னிய கவுண்டன்பாளையம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த நபரை அவிநாசி மதுவிலக்கு போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சூர்யா, 21, என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அவரை கைது செய்து, அவர் பதுக்கிவைத்திருந்த ஒரு கிலோ 200 கிராம் அளவு கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.