Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 2 மாதமாகியும் சீருடை வழங்கவில்லை பள்ளிக்கு வர தயங்கும் மாணவர்கள்

2 மாதமாகியும் சீருடை வழங்கவில்லை பள்ளிக்கு வர தயங்கும் மாணவர்கள்

2 மாதமாகியும் சீருடை வழங்கவில்லை பள்ளிக்கு வர தயங்கும் மாணவர்கள்

2 மாதமாகியும் சீருடை வழங்கவில்லை பள்ளிக்கு வர தயங்கும் மாணவர்கள்

ADDED : ஆக 02, 2024 01:55 AM


Google News
உடுமலை:மாநிலம் முழுவதும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட பொருட்களில் ஒன்றாக, இலவச சீருடை கல்வியாண்டுதோறும் வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் நான்கு 'செட்' சீருடைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொடுக்கப்படுகின்றன.

நடப்பு கல்வியாண்டு துவங்கி, இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இருப்பினும், இதுவரை திருப்பூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு, சீருடை வழங்கப்படவில்லை. மாநில அளவிலும் இப்பிரச்னை உள்ளது.

ஏற்கனவே சீருடை வைத்திருக்கும் மாணவர்கள், வழக்கம் போல் பள்ளிக்குச்சென்று வருகின்றனர்.

ஆனால் புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்கள், நடுநிலை பள்ளியிலிருந்து, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு மாறும் மாணவர்கள், கடந்த கல்வியாண்டில் சீருடை சரியில்லாமல் இருந்த மாணவர்களுக்கு, நடப்பாண்டில் புதிய சீருடைகள் வழங்கப்படாததால் சிக்கலாகியுள்ளது. இதனால் அடிக்கடி விடுப்பு எடுத்துக்கொள்கின்றனர்.

சீருடை இல்லாமல் வண்ண ஆடைகளில் வரும் மாணவர்கள், பஸ்களில் டிக்கெட் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us