/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாநில பேச்சுப்போட்டி; 9 பேர் தேர்வு மாநில பேச்சுப்போட்டி; 9 பேர் தேர்வு
மாநில பேச்சுப்போட்டி; 9 பேர் தேர்வு
மாநில பேச்சுப்போட்டி; 9 பேர் தேர்வு
மாநில பேச்சுப்போட்டி; 9 பேர் தேர்வு
ADDED : ஜூலை 07, 2024 11:02 PM
திருப்பூர்;நாடார் மகாஜன சங்கம் சார்பில், காமராஜர் பிறந்தநாள், கல்வித்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான பேச்சுப்போட்டி, வரும் 15ம் தேதி விருதுநகரில் நடக்கிறது. இதையொட்டி மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, திருப்பூரில், பி.என்., ரோட்டில் உள்ள முருகு மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது.
எஸ்.வி.என்., கல்லுாரி துணை தலைவரும் நாடார் மகாஜன சங்க பிரதிநிதியுமான பொன்னுசாமி தலைமைவகித்தார். மண்டல செயலாளர் ஈஸ்வரன், மாநகர் மாவட்ட செயலாளர் இளங்கோ, முருகு மெட்ரிக் பள்ளி தாளாளர் பசுபதி, செயலாளர் சசிகலா முன்னிலை வகித்தனர். மேயர் தினேஷ்குமார், வாழ்த்தி பேசினார். அரசு, மெட்ரிக் பள்ளி மாணவ மாணவியர், 205 பேர் போட்டியில் பங்கேற்றனர்.மாநில போட்டிக்கு 9 பேர் தேர்வாயினர்.