/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'ஸ்மார்ட்' ஆக இல்லாத 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகள் 'ஸ்மார்ட்' ஆக இல்லாத 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகள்
'ஸ்மார்ட்' ஆக இல்லாத 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகள்
'ஸ்மார்ட்' ஆக இல்லாத 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகள்
'ஸ்மார்ட்' ஆக இல்லாத 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகள்

ஸ்மார்ட் ரோடுகள்
நகரப் பகுதியில் அகலமாக உள்ள பல ரோடுகள் தேர்வு செய்து, ஸ்மார்ட் ரோடுகளாக மாற்றும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அவ்வகையில், 15 கி.மீ., நீளமுள்ள ரோடுகள் ஸ்மார்ட் ரோடாக மாற்றப்பட்டுள்ளது.
மீன் மார்க்கெட்
தென்னம்பாளையம் சந்தை வளாகம் அருகே மீன் மார்க்கெட் கட்டி முடித்து முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார். 2.25 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த வளாகம், திறப்பு விழா கண்டது முதல் மூடியே உள்ளது.
டவுன் ஹால்,பார்க்கிங் வளாகம்
குமரன் ரோட்டில் டவுன்ஹால் அரங்கம் இருந்த இடத்தில், பன்னோக்கு மாநாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இது 53 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் அதனருகே, 13 கோடி ரூபாய் செலவில் பல அடுக்கு வாகன நிறுத்தம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இவற்றை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். இந்த இரு வளாகங்களும் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
நொய்யல் கரை மேம்பாடு
மாநகரின் மையப் பகுதியில், நொய்யல் ஆறு கடந்து செல்கிறது. மாநகராட்சி எல்லைக்குள் ஏறத்தாழ 10 கி.மீ., நீளத்துக்கு நொய்யல் அமைந்துள்ளது. ஆக்கிரமிப்பு, புதர்கள், கழிவு நீர் வாய்க்கால் கலப்பு, குப்பைகள் கழிவுகள் கொட்டி பாழ்படுத்துதல் போன்றவற்றிலிருந்து நொய்யலைக் காப்பாற்றும் வகையில், நொய்யல் கரை மேம்பாடு திட்டம், 160 கோடி ரூபாய் செலவில், செயல்படுத்தப்படுகிறது.
நிதி வீணடிப்பு
முந்தைய ஆட்சிக் காலத்தில், அப்போதைய மாநகராட்சி நிர்வாகமும், அதன் பின்னர் தனிஅலுவலர் கட்டுப்பாட்டிலும் இது போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. உரிய திட்டமிடல் இல்லாமல் நிதி அதிகளவில் வீணடிக்கப்பட்டுள்ளது.