/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 03, 2024 02:10 AM

திருப்பூர்;கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், திருத்திய வழிகாட்டி நெறிமுறைகளை உடனே வெளியிட வேண்டுமென, ஊரக வளர்ச்சி அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக அரசு, கலைஞர் கனவு இல்லம், தொகுப்பு வீடு பராமரிப்பு திட்டங்களுக்கு போதுமான ஊழியர் கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும். கனவு திட்டம் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு குறித்த, திருத்திய வழிகாட்டி நெறிமுறைகளை உடனே வெளியிட வேண்டும்.
தமிழ்நாடு அரசே, கலைஞர் கனவு இல்லம், தொகுப்பு வீடு பராமரிப்பு திட்ட பயனாளிகள் பட்டியலை தயாரிக்க, போதிய அவகாசம் வழங்க வேண்டும்.
இம்மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம், கலெக்டர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர், கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து, கோரிக்கையை வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.