ADDED : ஜூன் 08, 2024 12:19 AM
உடுமலை;குடிமங்கலம் ஒன்றியம், கொங்கல்நகரத்தில், மாநில நெடுஞ்சாலையோரத்தில், வாரந்தோறும் வியாழக்கிழமையன்று, வாரச்சந்தை நடைபெறுகிறது.
ரோட்டோரத்தில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் நடத்தப்படும் சந்தையால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சந்தைக்கு வருபவர்கள் வாகனங்களை தாறுமாறாக நிறுத்திக்கொள்வதால், பிற வாகனங்கள் செல்ல முடிவதில்லை. எவ்வித அனுமதியும் இல்லாமல், சந்தை நடத்தப்படுவது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும்.