Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாணவ மாணவியருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்வி

மாணவ மாணவியருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்வி

மாணவ மாணவியருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்வி

மாணவ மாணவியருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்வி

ADDED : ஜூலை 06, 2024 08:50 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்:திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா நடந்தது.

தலைவராக செல்லத்துரை, செயலாளராக பாலமுருகன், பொருளாளராக செல்வராஜு மற்றும் நிர்வாக குழு, செயற்குழு, பிற துறைசார்ந்த குழுவினர் பொறுப்பேற்றுக் கொண்டனர். கவுரவ வருந்தினராக பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ரவி, ரோட்டரி முன்னாள் கவர்னர் சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினர்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த்ராம், மண்டல ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், உதவி கவர்னர் பாரதிதாசன் வாழ்த்துரை வழங்கினர். விழாவில், அவிநாசியைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஹரிணி மற்றும் சபரிஸ்ரீ ஆகியோருக்கு லேப் டாப் வழங்கப்பட்டது.

கல்லூரி மாணவி அபி ப்ரின்சிக்கும், பள்ளி மாணவர்கள் இருவருக்கும் கல்வி உதவித்தொகையை முன்னாள் தலைவர் உண்ணி வெங்கடேஷ் வழங்கினார். தடகள போட்டிகளில் தென்னிந்திய அளவில் வெண்கலம் வென்றுள்ள மாணவர் யுகேஷ்-க்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

---

அவிநாசியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஹரிணி,, சபரிஸ்ரீ ஆகியோருக்கு, வடக்கு ரோட்டரி சார்பில், லேப்டாப் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us