Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ போலீஸ் டைரி

போலீஸ் டைரி

போலீஸ் டைரி

போலீஸ் டைரி

ADDED : ஜூலை 31, 2024 01:02 AM


Google News

புது மாப்பிள்ளை தற்கொலை


திருப்பூர் ஒன்றியம், வள்ளிபுரம் ஊராட்சி, அப்துல் கலாம் நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 30, பனியன் தொழிலாளி. இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. குடும்ப தகராறில் கடந்த, 20 நாட்களுக்கு முன் மனைவி கோபித்து கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் இருந்த ரஞ்சித்குமார், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெருமாநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

சிறுமி கர்ப்பம்: டெய்லர் கைது


அவிநாசி பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் கேசவன், 21. டெய்லர். பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். சிறுமி கர்ப்பமானார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவிநாசி அனைத்து மகளிர் போலீசார் கேசவனை, 'போக்சோ' சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர்.

வழிப்பறி முயற்சியில் கைது


அவிநாசி, தெக்கலுார் அருகே செங்காளிபாளையம் பகுதியில் தோட்டத்தில் பூவாத்தாள், 70, என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, டூவீலரில் வந்த சேலம் மாவட்டம், மேட் டூரை சேர்ந்த தனசேகர், 33, என்பவர் மூதாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்ப முயன்றார். மூதாட்டி சத்தம் போடவே தனசேகர் டூவீலரில் தப்பினார். அவிநாசி போலீசார், தனசேகரை கைது செய்துடூவீலரை பறிமுதல் செய்தனர்.

கோவிலில் திருடியவர் கைது


கொடுவாய் பகுதியிலுள்ள பெருமாள் கோவிலில், 2 நாள் முன், 5 ஆயிரம் ரூபாய் மற்றும் 20 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது. இது குறித்த புகாரின் பேரில் அவிநாசி பாளையம் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், தேனி மாவட்டம், உத்தமபாளையம் - இந்திரா காலனியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் மகன் செல்வம், 24 என்பவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி மீது பைக் மோதி ஒருவர் பலி


விஜயமங்கலத்தை சேர்ந்தவர் ரவிபாண்டி, 34. இவர், பனியன் நிறுவனத்தில் கான்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார். 29ம் தேதி இரவு, பைக்கில் கிருபானந்தன், என்பவருடன் வீட்டுக்கு புறப்பட்டார். ஆதியூர் பிரிவு மேம்பாலம் அருகே, நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியது. படுகாயம் அடைந்த இருவரும், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வழியில், ரவிபாண்டி உயிரிழந்தார். கிருபானந்தன் சிகிச்சை பெற்று வருகிறார். பெருமாநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்ற வாலிபர் கைது


பெருமாநல்லுார் ஊராட்சி, கொண்டத்து காளியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்கப்படுவதை அறிந்து, போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். அதில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலம், பவுன் சோனி என்ற பகுதியை சேர்ந்த நரேஷ் சேத்தி, 27, என்பவரை கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஒடிசா மாநிலத்தில் இருந்து கடத்தி வந்து இங்கு பனியன் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ததுவிசாரணையில் தெரியவந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us