/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நம்பிக்கையுடன் ஜமாபந்தியில் மனு தந்த மக்கள் நம்பிக்கையுடன் ஜமாபந்தியில் மனு தந்த மக்கள்
நம்பிக்கையுடன் ஜமாபந்தியில் மனு தந்த மக்கள்
நம்பிக்கையுடன் ஜமாபந்தியில் மனு தந்த மக்கள்
நம்பிக்கையுடன் ஜமாபந்தியில் மனு தந்த மக்கள்

திருப்பூர் வடக்கு
திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் புஷ்பாதேவி தலைமையில் ஜமாபந்தி துவங்கியது. தாசில்தார் மகேஸ்வரன் உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். நேற்று, நெருப்பெரிச்சல், மண்ணரை, தொட்டிபாளையம் கிராமங்களுக்கான ஜமாபந்தி நடந்தது.
திருப்பூர் தெற்கு
திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமில், கலால் உதவி கமிஷனர் ராம்குமார் தலைமையில் ஜமாபந்தி துவங்கியது. தாசில்தார் கவுரிசங்கர் பங்கேற்றார். மங்கலம், ஆண்டிபாளையம், திருப்பூர், வீரபாண்டி, இடுவாய் கிராமங்களுக்கான.
ஊத்துக்குளி
ஊத்துக்குளி தாலுகாவில், டி.ஆர்.ஓ., ஜெய்பீம் தலைமையில் ஜமாபந்தி துவங்கியது. நேற்று, குன்னத்துார் பிர்காவுக்கு உட்பட்ட, 27 கிராமங்களுக்கு நடந்தது. இன்று, ஊத்துக்குளி பிர்காவுக்கு உட்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நடக்கிறது.
பல்லடம்
பல்லடம் தாலுகா அலுவலகத்தில், சப்கலெக்டர் சவுமியா தலைமையில் ஜமாபந்தி நடந்தது. நேற்று, பல்லடம் பிர்காவுக்கு உட்பட்ட 7 கிராமங்களுக்கு நடந்தது; இன்று, கரடிவாவி பிர்காவில் உள்ள 7 கிராமங்கள்; 25ம் தேதி, சாமளாபுரம் பிர்காவில் உள்ள 7 கிராமங்கள்; 26ம் தேதி, பொங்கலுார் பிர்காவில் 8 கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகிறது.
அவிநாசி
அவிநாசி தாலுகா அலுவலகத்தில், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குமாரராஜா தலைமையில் ஜமாபந்தி துவங்கி யுள்ளது. நேற்று, சேவூர் பிர்காவுக்கு உட்பட்ட 12 கிராமங்களின் வருவாய் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. இன்று, அவிநாசி மேற்கு பிர்காவின் 10 கிராமங்கள்; வரும் 25ம் தேதி அவிநாசி கிழக்கு பிர்காவில் உள்ள 10 கிராமங்கள்; 26ம் தேதி பெருமாநல்லுார் பிர்காவின் 8 கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற உள்ளது.
காங்கயம்
காங்கயம் தாலுகா அலுவலகத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. கத்தாங்கண்ணி, கணபதி பாளையம், படியூர், சிவன்மலை, தம்மரெட்டிபாளையம், ஆலாம்பாடி, காங்கயம், வீரணம்பாளையம், வட்டமலை, காடையூர் கிராம வருவாய்த்துறை கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. இரண்டு துாய்மை பணியாளர் குடும்பத்தினருக்கு, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.