Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கல்லுாரி செல்லாதவர் கண்டறிய உத்தரவு

கல்லுாரி செல்லாதவர் கண்டறிய உத்தரவு

கல்லுாரி செல்லாதவர் கண்டறிய உத்தரவு

கல்லுாரி செல்லாதவர் கண்டறிய உத்தரவு

ADDED : ஜூன் 06, 2024 11:35 PM


Google News
உடுமலை;திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் உயர்கல்வி படிப்புகளில் இணைந்து விட்டனரா என்பது குறித்த ஆலோசனை கூட்டம், திருப்பூரில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்தது.

கலெக்டர் பேசுகையில், ''பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றவர்கள் பல்வேறு காரணங்களால் உயர்கல்விக்கு விண்ணப்பிக்காமல் உள்ளனர். அவர்கள் உயர்கல்வி செல்வதற்கு, கல்வி சார்ந்த அலுவலர்கள் பங்களிப்பு முக்கியம். உயர்கல்விக்கு செல்லாதவர்களை கண்டறிந்து, காரணங்களை முழுமையாக அறிந்து, தேவையான அனைத்து வழிகாட்டுதல், உதவிகளை உடனடியாக செய்து தர வேண்டும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us