Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஹியரிங் எய்ட் சென்டர் திருப்பூரில் துவக்கம்

ஹியரிங் எய்ட் சென்டர் திருப்பூரில் துவக்கம்

ஹியரிங் எய்ட் சென்டர் திருப்பூரில் துவக்கம்

ஹியரிங் எய்ட் சென்டர் திருப்பூரில் துவக்கம்

ADDED : ஜூலை 10, 2024 11:44 PM


Google News
Latest Tamil News
திருப்பூர் :

'ஹியரிங் எய்ட் சென்டர்' என்ற முன்னணி காது கருவி நிறுவனத்தின் புதிய கிளை திருப்பூரில், பார்க் ரோடு அருகில், பின்னி காம்பவுண்ட் ரோடு, ஜெ.கே.டவர்ஸ், தரை தளத்தில் கடை எண். 2ல், திறக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தினர் கூறியதாவது: திருப்பூர் ஹியரிங் எய்ட் சென்டரில், சர்வதேச தரத்திலான, நவீன உயர் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட காது கேட்கும் கருவிகள் உள்ளன. காதுக்கு உள்ளே அணியும் மிகச்சிறிய கருவி, கண்ணுக்கு புலப்படாத டிஜிட்டல் காது கருவி, காதுக்கு மேல் அணியும் காது கருவிகள் கிடைக்கும்.

அவரவர் காது கேட்கும் திறனுக்கு ஏற்ற வகையில், செவித்திறன் நிபுணர்களால் பரிசோதிக்கப்பட்டு பொருத்தப்படுகிறது. சர்வதேச அளவில் பிரபலமான கம்பெனிகளின் காது கருவிகள் கிடைக்கும்.

பிறந்த, 30 நாட்களுக்குள் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் காது கேட்கும் திறன் அவசியம்; அப்போது தான் பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு இருப்பின், அதை சரி செய்ய முடியும். இந்த பரிசோதனை திருப்பூர் கிளையில் உள்ளது.

திறப்பு விழா சலுகையாக, இலவச பேட்டரிகள் மற்றும் வட்டியில்லா தவணை வசதியுண்டு. இலவசமாக காது பரிசோதனையும் செய்து கொள்ளலாம். வரும், 31ம் தேதி வரை வழங்கப்படும். விபரங்களுக்கு, 7540035321 தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us