ADDED : ஜூன் 08, 2024 11:41 PM
திருப்பூர்;வெள்ளகோவில் நகராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது 50 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி; நகராட்சி புது அலுவலக கட்டடம்; பள்ளி கட்டடங்கள் பராமரிப்பு,தினசரி மார்க்கெட் வளாகம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மண்டல நகராட்சிகளின் மண்டல இயக்குனர் இளங்கோவன் இப்பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.