Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தாய் - மகள் பலி

தாய் - மகள் பலி

தாய் - மகள் பலி

தாய் - மகள் பலி

ADDED : ஜூன் 02, 2024 01:32 AM


Google News
பொங்கலுார்:பல்லடம் அடுத்த கரடிவாவியைச் சேர்ந்தவர் ராஜீவ், 29; அவரது மனைவி விஜி, 26; நுாற்பாலை தொழிலாளர்கள். இவர்களது மகள் வின்சிலின், 6. ராஜீவ் மொபைல் போன் செயலி ஒன்றைத் தொட்டுள்ளார்.

வெளி நாட்டிலிருந்து பேசுவதாக போன் வந்துள்ளது. அவர்கள் கடன் கொடுப்பதாக கூறியுள்ளனர். இரண்டு லட்சம் ரூபாய் கடன் கேட்டுள்ளார். கடன் கொடுப்பதாக கூறிய நபர்கள் 'டாக்குமென்ட் சார்ஜ் தர வேண்டும்' என்று கூறி, 40 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளனர். கடன் கொடுக்கவில்லை.

விரக்தியடைந்த தம்பதியர், கடந்த மே, 30ல் கரடிவாவி பஸ் ஸ்டாண்டில், எலி மருந்து சாப்பிட்டு குழந்தையுடன் மயங்கி விழுந்தனர். அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வின்சிலின் நேற்று முன்தினம் பலியானார். நேற்று விஜி உயிரிழந்தார். ராஜீவ் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us