Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நாலு மாதத்துக்கு பின் கூட்டம்; 'நறுக்கு தெறிக்க' பேசிய கவுன்சிலர்கள்

நாலு மாதத்துக்கு பின் கூட்டம்; 'நறுக்கு தெறிக்க' பேசிய கவுன்சிலர்கள்

நாலு மாதத்துக்கு பின் கூட்டம்; 'நறுக்கு தெறிக்க' பேசிய கவுன்சிலர்கள்

நாலு மாதத்துக்கு பின் கூட்டம்; 'நறுக்கு தெறிக்க' பேசிய கவுன்சிலர்கள்

ADDED : ஜூன் 29, 2024 01:32 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நான்கு மாதங்களுக்கு பின் நேற்று நடந்தது. மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷ னர் பவன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கவுன்சிலர்களின் விவாதம்:

மக்கள் அதிருப்தி


திவாகரன் (தி.மு.க.,): மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர், வகுப்பறை பற்றாக்குறை உள்ளது. ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நஞ்சப்பா பள்ளி சுற்றுச் சுவர் உயர்த்த வேண்டும். ஜெய்வாபாய் பள்ளி கழிவு நீர் முறையாக செல்ல வடிகால் கட்ட வேண்டும்.

கவிதா (தி.மு.க.,): சமுதாயக் கூடம் கட்ட வேண்டும். கழிவுநீர் வடிகால்கள் பல பகுதிகளில் அமைக்க வேண்டும்.

லோகேஸ்வரி (தி.மு.க.,): குப்பை வண்டிகள் முறையாக இயக்குவதில்லை. நாய் பிடிக்கும் வாகனம் வருவதில்லை.

கோபால்சாமி (தி.மு.க.,): அறிவொளி நகர் நுண்ணுர உற்பத்தி மையம் எதிர்ப்பு காரணமாக இயங்காமல் இருந்தது. தற்போது மீண்டும் செயல்படுகிறது. ஈக்கள் தொல்லை என மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

மக்கள் ஏளனச் சிரிப்பு


ரவிச்சந்திரன் (இ.கம்யூ.,): இரண்டு ஆண்டாக புதுவரி விதிக்காமல் உள்ளது. உரிய வழிகாட்டுதல் இல்லை. விதிமுறைகள் எளிமைப்படுத்த வேண்டும்.

செந்தில்குமார் (காங்.,): எனது வார்டில் புதிய கான்கிரீட் ரோடு அமைத்து சில நாட்களில் பல அடி நீளத்துக்கு குழி தோண்டி, குழாய் பதித்து வருகின்றனர். இதனை பார்த்து மக்கள் ஏளனமாக சிரிக்கின்றனர். நிதி ஆதாரம் வீணாகிறது. பணியில் ஒருங்கிணைப்பு இல்லை.

அலுவலரை பெயர் சொல்லியும், ஒருமையிலும் ஒப்பந்ததாரர்கள் அழைக்கும் நிலை உள்ளது. எங்கு பார்த்தாலும் தெருநாய் தொல்லை அதிகரித்துள்ளது. ஒரு நொடியில் நாய்க்கடியிலிருந்து தப்பினேன். நிரந்தர தீர்வு காண வேண்டும்.

நாகராஜ் (ம.தி.மு.க.,): குப்பை வண்டிக்கு டீசல், பேட்டரி, டயர் இல்லாமல் நிற்கிறது. இது குறித்து கேட்டால் உடனே அனுப்புகிறோம் என்று கூறிச் செல்லும் பொறுப்பாளர்கள் மாயமாகி விடுகின்றனர்.

சாலையில், குழி தோண்டிய இடிபாடுகள் அகற்றாமல் ரோட்டில் கிடக்கிறது. வரி விதிப்புக்கு ஏன் தாமதம் செய்கின்றனர் என தெரியவில்லை. குடிநீர் தொட்டி வளாகங்களில் காவலர் நியமிக்க வேண்டும். அங்கு 'கஞ்சா' நபர்கள் நடமாட்டம் உள்ளது.

12 நாளாக குடிநீர் இல்லை


குணசேகரன் (பா.ஜ.,): மத்திய அரசிடமிருந்துநிதி பெற்று மாநகராட்சியில் பணி செய்ய வேண்டும். எனது வார்டில்குழாய் பதிப்பு பாதியில் நிற்கிறது. கேட்டால் பணம் வரவில்லை என்கின்றனர்.

சேகர் (அ.தி.மு.க.,): காலேஜ் ரோட்டில்குடிநீர் வீட்டு இணைப்பு பெற்றுக் கொண்டு, வணிகரீதியாகப் பயன்படுத்துகின்றனர். ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய ரோடு அமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.

செழியன் (த.மா.கா.,): நல்லாத்துப்பாளையம் வரை மழை நீர் வடிகால் கட்டியுள்ளனர். ஆனால், மழைநீர் அதில் செல்ல குழாய் பதிக்கவில்லை. முன் போலவே மழை நீர் ரோட்டில் தேங்கி, வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.

குடிநீர் சப்ளை செய்து, 12 நாளாகிறது. என் வார்டு ஏன் புறக்கணிக்கப்படுகிறது?

இவ்வாறு விவாதம் நடந்தது.

திருப்பூர் மாநகராட்சி கூட்டத் தில், எதிர்க்கட்சி குழு தலைவர் அன்பகம் திருப்பதி பேசியதாவது:

'ஓட்டுப்போடாமல் விட்டோமே'

வருந்துவோருக்கு பா.ஜ., நன்றிகுணசேகரன் (பா.ஜ.,) பேசுகையில், ''லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்றுள்ள மோடிக்கு பாராட்டும், ஓட்டு போட்டவர்களுக்கு, ஓட்டுப் போடாமல் விட்டோமோ என்று வருந்துவோருக்கும் நன்றி''



வண்டிகள் டீசல் இல்லாமல் நடுவழியில் நிற்கிறது. காலை 6:30 மணிக்கு செல்லும் வாகனம் 8:30 மணிக்கு சென்றால் துாய்மைப் பணி எப்படி நடக்கும். துாய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் குறைவாகத் தருகின்றனர். பி.எப்., பிடித்தம் செய்வதில்லை.

பிடித்தம் செய்தவர்களுக்கு தொகை தரவில்லை. மங்கலம் ரோட்டில் இரு புறமும் நிரந்தர ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. மேயர், கமிஷனர், மண்டல தலைவரிடம் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. தெரு விளக்கு பராமரிப்பு மோசம். புகார் செய்தாலும் கண்டு கொள்வதில்லை.

முறையாக பணி செய்யாத ஒப்பந்ததாரர்களை பிளாக் லிஸ்ட்டில் வைக்க வேண்டும். மத்திய பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை. போதை நபர்கள் அதிகரித்து வருகின்றனர். மனமகிழ் மன்றம் என்ற பெயரில் பல பார்கள் புதிதாக திறக்கப்படுகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும். மாநகராட்சி விரிவாக்கத்துக்கு வார்டு மறு சீரமைப்பு செய்யும் போது, கவுன்சிலர்களிடம் கருத்து கேட்க வேண்டும்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயத்தால் பலியானவர்களுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வர வேண்டும். சட்டசபையில் கள்ளச் சாராயம் விவகாரம் குறித்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை பேச அனுமதிக்காததை கண்டித்து வெளி நடப்பு செய்கிறோம்.

(இது குறித்து தி.மு.க., கவுன்சிலர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து கருப்பு பேட்ஜ் அணிந்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள், எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் வெளி நடப்பு செய்தனர்)

ராஜினாமா செய்வேன்

'ஓட்டுப்போடாமல் விட்டோமே'

வருந்துவோருக்கு பா.ஜ., நன்றிகுணசேகரன் (பா.ஜ.,) பேசுகையில், ''லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்றுள்ள மோடிக்கு பாராட்டும், ஓட்டு போட்டவர்களுக்கு, ஓட்டுப் போடாமல் விட்டோமோ என்று வருந்துவோருக்கும் நன்றி''



தி.மு.க., கவுன்சிலர் தடாலடி

தி.மு.க., கவுன்சிலர் தாமோதரன், ''வடிகால் கட்டாமல் ரோடு பணி செய்ய வேண்டாம் என்று கூறியதால் என் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தி, ஒப்பந்ததாரர் போலீசில் புகார் செய்துள்ளார். ஆளும் கட்சிக்கே இந்த நிலை என்றால், எதிர்க்கட்சியினர் நிலை எப்படியிருக்கும். அதிகாரிகள் அறிவுறுத்தியும் பணி நிறுத்தப்படவில்லை. கவுன்சிலர்களுக்கு என்ன மரியாதை இருக்கிறது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வேன்,'' என்றார்.

'ஓட்டுப்போடாமல் விட்டோமே'

வருந்துவோருக்கு பா.ஜ., நன்றிகுணசேகரன் (பா.ஜ.,) பேசுகையில், ''லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்றுள்ள மோடிக்கு பாராட்டும், ஓட்டு போட்டவர்களுக்கு, ஓட்டுப் போடாமல் விட்டோமோ என்று வருந்துவோருக்கும் நன்றி''







      Our Apps Available On




      Dinamalar

      Follow us