Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ காரணம்பேட்டை மின் நிலையம் பல்லடம் கோட்டத்தில் இணைப்பு

காரணம்பேட்டை மின் நிலையம் பல்லடம் கோட்டத்தில் இணைப்பு

காரணம்பேட்டை மின் நிலையம் பல்லடம் கோட்டத்தில் இணைப்பு

காரணம்பேட்டை மின் நிலையம் பல்லடம் கோட்டத்தில் இணைப்பு

ADDED : ஜூன் 04, 2024 01:00 AM


Google News
பல்லடம்:காரணம்பேட்டை துணை மின் நிலையம், பல்லடம் மின் கோட்டத்துடன் இணைக்கப்பட உள்ளதாக, மின்வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து கோவை மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு:

கோவை மாநகர் மின் பகிர்மான வட்டத்தின் கீழ் உள்ள சூலுார் உபகோட்டத்துக்கு உட்பட்ட காரணம்பேட்டை பிரிவு அலுவலகம் மற்றும் 33/11 கிலோ வாட் துணை மின் நிலையம் ஆகியவை நிர்வாக காரணங்களுக்காக, பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் கீழ் உள்ள கரடிவாவி உபகோட்டத்துடன் இணைக்கப்பட உள்ளது.

இந்த மாற்றம், நாளை ஜூன் 5 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. எனவே, காரணம்பேட்டை பிரிவு அலுவலகத்தின் கீழ் உள்ள மின் பயனாளர்கள், எதிர்வரும் நாட்களில், தங்களது மின் இணைப்பு சார்ந்த குறைகள், புகார்கள், கருத்துக்கள் மற்றும் பணிகளுக்கு பல்லடம் துணை மின் நிலையத்தின் கீழ் உள்ள கரடிவாவி உபகோட்டத்தை அணுகலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us