Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சென்றாய பெருமாள் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்

சென்றாய பெருமாள் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்

சென்றாய பெருமாள் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்

சென்றாய பெருமாள் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்

ADDED : மார் 11, 2025 06:38 AM


Google News
Latest Tamil News
உடுமலை: உடுமலை அருகே கண்ணம்மநாயக்கனுாரில், கூர்மை சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிேஷக விழா கடந்த 6ம் தேதி துவங்கியது. அன்று காலையில் விஷ்வக்சேன ஆராதனை, வாசுதேவ சுத்தி, புண்யாகவாசனம், சுதர்ஷன ேஹாமம், மகா பூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகளும் நடந்தன.

காலை, 9:30 மணிக்கு விமான கலசம், பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து 8ம் தேதி மாலையில் மகா சுதர்ஷன ேஹாமம், மகா சங்கல்பம், யாகசாலை பிரவேசம், கும்பஸ்தாபனம், முதற்கால வேள்வி நடந்தது.

நேற்று முன்தினம் அதிகாலையில் திருப்பல்லாண்டு, திருப்பாவை சிறப்பு பாராயணம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி, மூலமந்திர ேஹாமம், மூர்த்தி ேஹாமம், காலை 9:00 மணி அளவில் மகா கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து பெருமாள் விஷ்வரூப தரிசனம், மகா ஆரத்தி, மகா தீபாராதனை நடந்தது. சுற்றுப்பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று முதல், 48 நாட்கள் மண்டல பூஜை துவங்கியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us