/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாநகராட்சியுடன் இணைகிறதா திருமுருகன்பூண்டி? மாநகராட்சியுடன் இணைகிறதா திருமுருகன்பூண்டி?
மாநகராட்சியுடன் இணைகிறதா திருமுருகன்பூண்டி?
மாநகராட்சியுடன் இணைகிறதா திருமுருகன்பூண்டி?
மாநகராட்சியுடன் இணைகிறதா திருமுருகன்பூண்டி?
ADDED : ஜூன் 12, 2024 10:41 PM
திருப்பூர் : திருமுருகன்பூண்டி நகராட்சி, திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
பேரூராட்சியாக இருந்த திருமுருகன்பூண்டியின் மக்கள் தொகை, 30 ஆயிரத்தை தொட்டது; கடந்த, இரு ஆண்டுக்கு முன், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால், சாலை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என, மாவட்ட நிர்வாகம் நம்பிக்கையூட்டியது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படவில்லை.
இதற்கிடையே திருப்பூர் மாநகராட்சியின் அந்தஸ்தை உயர்த்தும் நோக்கில், அதன் எல்லையை மேலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பெருமாநல்லுார் உள்ளிட்ட பகுதிகள் இணைக்கப்படலாம் என உத்தேசப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே பூண்டியும் இணைக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.
பூண்டி நகராட்சி மக்கள் கூறியதாவது:பூண்டியில் போதிய குடிநீர் வினியோகம் இல்லாததால், தனி வீடுகளுக்கு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக குழாய் பொருத்தும் பணி மேற்கொள்ளப்படவில்லை. வீதி, தெருக்களுக்கு இடையே கழிவுநீர், மழைநீர் வடிகால் கட்டமைப்பும் சரியான நிலையில் இல்லை. இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட, அடுத்த ஓராண்டிலேயே, முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இருப்பினும், அடிப்படை தேவைகள் முழுமையாக பூர்த்தியடையவில்லை; இதுவரை மெகா திட்டங்களை நிறைவேற்ற, பெரியளவிலான நிதி ஒதுக்கீடும் இல்லை.பூண்டியின் அந்தஸ்து மட்டும் உயர்கிறது; ஆனால், மக்களின் தேவைகள் பூர்த்தியாவதில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதாக பேச்சு எழுந்துள்ளது. அவ்வாறு இணைப்பதால் மட்டும் நகராட்சி மக்களின் தேவைகள் பூர்த்தியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.