/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பருத்தி ஆடை உற்பத்திக்கு சிறப்பு ஜவுளி கொள்கை தொழில்துறையினர் எதிர்பார்ப்பு பருத்தி ஆடை உற்பத்திக்கு சிறப்பு ஜவுளி கொள்கை தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
பருத்தி ஆடை உற்பத்திக்கு சிறப்பு ஜவுளி கொள்கை தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
பருத்தி ஆடை உற்பத்திக்கு சிறப்பு ஜவுளி கொள்கை தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
பருத்தி ஆடை உற்பத்திக்கு சிறப்பு ஜவுளி கொள்கை தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
தேசிய ஆடையாகபருத்தி ஆடை
பருத்தி ஆடையை தேசிய ஆடையாக அறிவிக்க வேண்டும். பருத்தி ஆடை உற்பத்தியை ஊக்குவிக்க சிறப்பு ஜவுளி கொள்கை உருவாக்கப்பட வேண்டும். சர்வதேச வர்த்தகத்தில், இந்தியாவின் பங்களிப்பு, 6 சதவீதமாக இருக்கிறது. கடந்த, 15 ஆண்டுகளாக பின்னலாடை ஏற்றுமதி 3.8 சதவீதமாக தொடர்கிறது. உலக அளவில் பார்க்கும் போது, இந்திய ஆயத்த ஆடை வர்த்தகம் பின்னே சென்றுள்ளது. அதிக வேலை வாய்ப்பு வழங்கும் ஜவுளித்தொழிலில், அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
சீனாவிடம் 36 சதவீதம்
சீனாவில் இருந்து, 36 சதவீதம்; வங்கதேசத்தில் இருந்து, 12 சதவீதம் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடக்கிறது. வியட்நாம், எத்தியோப்பியா, இலங்கை போன்ற சிறிய நாடுகளில், இத்தொழிலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
தனி வாரியம் அவசியம்
இத்தகைய மாற்றங்களை சரிசெய்ய, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தலைமையில், தனி வாரியம் அமைக்க வேண் டும். கிளஸ்டர் முறையில், அனைத்து மாநிலங்களுக்கும் இத்தொழிலை விரிவாக்கம் செய்ய வேண்டும். அதிக அளவு சிறிய ஜவுளி பூங்காக்களை உருவாக்க வேண்டும்.