Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு

கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு

கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு

கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு

ADDED : ஜூலை 18, 2024 12:03 AM


Google News
திருப்பூர் : திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், நாளை (19ம் தேதி) நடக்கிறது.

இது குறித்து, திருப்பூர் சப்- கலெக்டர் சவுமியா ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருப்பூர் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், வரும், 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை, 4:00 மணிக்கு, சப்-கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கிறது.

இக்கூட்டத்தில், திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட, அவிநாசி, பல்லடம், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு, ஊத்துக்குளி ஆகிய ஐந்து தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று, தங்களது கோரிக்கையை தெரிவித்து தீர்வு பெறலாம்,' என்று தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us